முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வாக்கு மூலம் வழங்கச்சென்ற போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவினால் கைது செயய்ப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளை மீள உருவாக்க வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய கருத்தை ஒரு சில மாதங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வொன்றில் இவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.