காணாமல் போயுள்ள சிறுவனை தேடி பொலன்னறுவை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மெதிரிகிரிய விசோ பண்டார பகுதியை வசிப்பிடமாக கொண்ட பத்து வயதுடையயே சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பிரவீன் சின்தக்க எனும் இந்த சிறுவன் மாதம் 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். அன்றைய தினம் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று கொள்ள அந்த சிறுவன் தனது தாயுடன் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன் போது தனக்கு மலசலகூடத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருப்பதாக கூறி அச்சிறுவன் வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குரிய மலசலகூடத்திற்கு சென்றுள்ளார். எனினும் அதற்கு பின்னர் இச்சிறுவன் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென பெற்றோர் தெரிவிக்கின்றனர்.