செல்பி மோகத்தால் கடந்த 7 வருடங்களில் உலகெங்கும் 259 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலுள்ள மருத்துவ கல்லூரிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இவ்விடயம் தெரிய வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2017 மாதம் நவம்பர் வரை ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்குதல், சறுக்கி விழுதல், ரயில் விபத்துக்கள் காரணமாகவே இவ்வாறு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மரணமடைந்தவர்களில் அதிகமானோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அவ்வாய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.