பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான 2 வது மூவர் அடங்கிய விசேட நீதிமன்றத்திற்கான 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இவர்களை நியமித்துள்ளார்.
தற்போது மேல் நீதிபதிகளாக கடமையாற்றும் 3 நீதிபதிகள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர் குருசிங்க, அமல் ரணராஜா, சசி மகேந்திரன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகளுமாவர். பாரியளவிலான நிதி மோசடி ஊழல் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்கு 3 விசேட மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் நீதிமன்ற சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த விசேட மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இவ்வாறு அமைக்கப்பட்ட முதலாவது நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.