சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமேல் பிராந்தியத்திற்கான கடற்படை பிரிவினர் அம்பந்தீவு பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 3 வலைகள் மற்றும் இரண்டு படகுகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. குறித்த மீனவர்கள் மூவரையும் புத்தளம் உதவி கடற்தொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.