மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Related Articles
மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு இருவர் தேர்வாகியுள்ளார். மருத்துவம், இயற்பியல்,பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. மெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.
நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான இவர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஓக்டோபர் 3-ம் திகதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் திகதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment