பணத்திற்காக சூதாடும் நிறுவனம் ஒன்றுக்குள் ஒரவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று சீதுவயில் பதிவாகியுள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் வாய்த்தர்க்கம் நீண்டு கொண்டு சென்றதனால் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.