முதற்தடவையாக சர்வதேச பௌத்த சுற்றுலா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருணாகல் ரிதி விகாரையில் இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது. பொறுப்பான ஆன்மீக சுற்றுலா அபிவிருத்திக்காக எளிமையான வாழ்க்கையும், நடுவழிப் பயணமும் என்பது மாநாட்டின் தொனிப்பொருள் ஆகும்.
இதனை சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ சங்கமும், கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது