கொழும்பு புதுக்கடை புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 9 நாட்கள் தொடர்ச்சியாக இவ்வாலயத்தில் நவநாள் வழிபாடுகள் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜோய் மரியரட்னம் தலைமையில் இடம்பெற்றது. அதிமேற்றாணியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரது தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. கிழவேசன் சபையின் மாகாண தலைவர் வணக்கத்திற்குரிய கொண்டன் டைம் உட்பட மறை மாவட்ட குருக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமேற்றாணியார் 175 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கேக்கையும் வெட்டினார். இந்நிகழ்வில் அருள் உரை வழங்கிய பேராயர் பல சவால்களுக்கு மத்தியில் இறை நம்பிக்கையுடன் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.