5ம் தர புலமைப்பரிசில் உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பது தொடர்பிலும் யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டமைக்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கினார். புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் காரணமாகவே குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததன் பின்னர் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளியிலும் மாற்றம் ஏற்படும். இதனால் சித்தியடைவோரின் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதேவேளை தற்போது வருடாந்த புலமைப்பரிசில் தொகையை 15 ஆயிரம் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதனை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.