உலகில் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 4 கோடி கணக்குகள் பாதுகாப்பற்ற விதத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் கணக்குகளின் தரவுகளை திருடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் பொறியியல் நிபுணர்களினால் இதுதொடர்பில் கண்டறியப்பட்டு, அதனை சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் பணிகள் நிறைவுக்கு கொண்டுவரப்படுமென பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.