போலி கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் மருதானை டீன்ஸ் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர், பலரை வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவருக்கெதிராக கொழும்பு குற்றப்புனலாய்வு பிரிவினரால் 16 வழக்குகள் தொடரபபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.