கடுவலை – பியகம வீதியின் போக்குவரத்து இன்று இரவு 07.00 மணிமுதல், நாளை காலை 06.00 மணிவரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. களனி கங்கைக்கு குறுக்காக தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலத்தை அகற்றும் பணிகள் இடம்பெறவுள்ளன. இதன் காரணமாக வீதியை தற்காலிகமா க மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் அதிவேக வீதியூடாக, கடுவலை முதல் பியகம வரை பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.