ஒருதொகை அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 ஆயிரத்து 242 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் வேறு நாடுகளிலிருந்து விமானத்தினூடாக பொருட்களை எடுத்துவந்து, விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்களை அரசுடைமையாக்க சுங்கப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.