இலங்கை கைவிணை பொருட்களின் ஏற்றுமதி நூற்றுக்கு 11 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஷில்ப அபிமானி கைத்தொழில் கண்காட்சியில் 12 மில்லியனுக்கும் அதிக வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாரம்பரிய ஆடைகள் மற்றும் பெண்களின் கைவினை தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.