சுகாதார ஊக்குவிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துறை சார் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்க தீர்மானித்துள்ளனர். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். துறைசார் அதிகாரிகள் 2586 பேருக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. பொது சுகாதார தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார ஆண் தாதியர்கள், குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் பொது சுகாதார துறைசார் அதிகாரிகளுக்கும் மோட்டார் சைக்கிள் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 865 மில்லியன் ரூபா செலவிடப்படுமென சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.