நாட்டிலுள்ள 6 உள்நாட்டு விமான நிலையங்களை துரிதகதியில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரத்மலானை, மட்டக்களப்பு, பலாலி, சிகிரியா, கொக்கல மற்றும் திகன ஆகிய விமான நிலையங்களே இவ்வாறு அபிவிருத்திக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இதுகுறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. விமான நிலையங்களினூடாக மிகச்சிறந்த சேவையினை வழங்கும் விதத்தில் அதற்கான திட்டங்களை தயார் செய்வதற்கு இச்சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.