சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோசடிகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.