எதிர்வரும் 28ம் திகதி சர்வதேச தகவலறியும் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. அதற்கிணைவாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தகவலறியும் வாரத்திற்கமைய நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் யாழ் வீரசிங்க மண்டபத்தில் மக்களுக்கு தகவலறியும் சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நீர்கொழும்பு வாராந்த சந்தைக்கு அருகிலும், கம்பஹா நகரிலும், தகவலறியும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வீதி நாடகங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .