புறாவை பிடிக்கச்சென்ற பாடசாலை மாணவர், கட்டிடமொன்றின் கூரையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் உடப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.