மகாத்மா காந்தியினால் எழுதப்பட்ட கடிதமொன்று நான்காயிரத்து 358 டொலர்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் ஏல விற்பனை இடம்பெற்றுள்ளது. திகதி குறிப்பிடப்படாத குறித்த கடிதம், கதர் ஆடைகளை நூற்பது குறித்தும், நூல்களை தயாரிக்கும் ராட்டை குறித்தும் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு எழுதப்பட்டுள்ளது.