எல்லங்கா நீர்பாசன புனரமைப்பு நாடு தழுவிய அரச நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தின் குள புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அமுல்படுத்தப்பட்டுள்ள நீர்பாசன புனரமைப்பு நிகழ்ச்சி திட்டத்தின் முதல் கட்டம் ஆகும். அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி நினைவு படிகத்தை திறந்து வைத்தார். இதற்கு அமைய மகாவிலச்சிய நமடகஸ்திஹிலிய குளத்திற்கு அருகாமையில் இருந்து வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்காப்பட்டது. மகாவிலச்சிய மற்றும் நொச்சியாகம பிரதேச செயலக பிரிவுகளில் 17 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. இதன் கீழ் நமபடகஸ்திஹிலிய குளம் மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் புனரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹெலம்பவௌ, துனுமடலாவ குளம் திவுல் குளம், லேனவௌ ஆகிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கு இணைவாக குளத்தை அண்மித்து வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான பல்வேறு செயற்றிட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 2400 குளங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடுபூராகவும் பல பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினால் குளங்களின் புனரமைப்பு பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. மாபெரும் நீர்பாசன பொறியியல் எண்ணக்கருவாக எல்லங்கா தொகுதி கருதப்படுகின்றது. இதன்மூலம் குளங்களில் கூடிய அளவு நீரை தேக்கி வைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியில் குடிநீர் மற்றும் நீர்பாசன செயற்பாடுகளுக்கு என காணப்படுகின்ற நீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு இதன்மூலம் கிடைக்கவுள்ளது. அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.