வட மாகாணத்தில் எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை முன்கூட்டியே களஞ்சியப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரும்போகத்தில் வட மாகாணத்தில் அதிக மழை பெய்யும் என்பதற்காகவே இவ்வாறு உரம் களஞ்சியப்படுத்தப்படவுள்ளது. யாழ் குடா நாட்டிற்கு தேவையான உரத்தின் அளவில் 520 மெட்ரிக் தொன் உரம் ஏற்கனவே களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 226 மெட்ரிக் தொன் யூரியா உரமும் அடங்கும். அத்துடன் பொசுபேற்று உரமும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு தேசிய உர செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.