ஜனாதிபதியோ பிரதமரோ பொலிஸ்மா அதிபரை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிடவில்லையென சட்டம் ஒழுங்கு துறைக்கான பிரதி அமைச்சர் நளின் பண்டார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் வழமை போன்று ஆரம்பமானது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த செவனகல சீனி தொழிற்சாலை தனியாருக்கு வழங்கப்பட உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அதுபோன்ற தீர்மானங்கள் எதுவும் இல்லையென தெரிவித்தார்.
இதன் போது பதிலளித்த அமைச்சர் மங்கல சமரவீர நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீனி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சீனியின் விலையை அதிகரிக்க போவதாக தவறான செய்தி வெளிவந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் போது கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்நிலைமையே காணப்படுவதாக தெரிவித்தார். தென்னாபிரிக்க நாடுகளில் உள்ள நாணயங்களின் பெறுமதியை விட இலங்கை நாணயத்தின் பெறுமதி சிறப்பாக இருப்பதாக கூறினார். இதேவேளை ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபருக்கு 2 வாரங்களில் தமது பதவியைராஜினாமாசெய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் நளின் பண்டார அவ்வாறு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லையென பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.