யாழ் நகரில் இரண்டு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ் சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை புகுந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி சுமார் 15 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளார். இன்று அதிகாலை வழமை போல் நிதி நிறுவனத்தை திறந்த ஊழியர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக எடுத்துள்ளனர். இதன்போது கத்தியோடு நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இதேவேளை கைதடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 50 ஆயிரம் ரூபாவை கொள்ளையடித்ததுடன், வீட்டின் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை பத்து பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள் மற்றும் ஆயுதங்களுடன் வீட்டினுள் புகுந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்தை சேதப்படுத்தியதுடன், பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது. இத்தாக்குதலில் ஐவர் காயமடைந்தனர்.