பாராளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது. இன்றையதினம் பெருந்தோட்டங்களில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அதிகாரசபை தொடர்பான சட்டமூலம் குறித்து விவாதங்கள் இடம்பெறவுள்ளன. அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் குறித்த மலையக அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறவுள்ளது. இதற்கு மேலதிகமாக பிரதேச சபை திருத்த சட்டமூலம், ஸ்ரீலங்கா முகாமைத்துவ சேவை நிறுவன திருத்தச்சட்டமூலம் ஆகியன தொடர்பிலும் இன்று விவாதங்கள் இடம்பெறவுள்ளன.