உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து ஆய்வை மேற்கொண்டன. குறித்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் 15 வயதுக்குட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள் சாதாரண காரணங்களுக்காக இறப்பதாக ஆய்வுக்குழுவின் தலைவர் லோரன்ஸ் சாண்டி தெரிவித்துள்ளார். 1990ம் ஆண்டுக்கு பிறகு குழந்தைகள் இறப்பு வீதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.