அரச தலையீட்டுடன் நாளாந்தம் 200 மெட்ரிக் தொன் உருளை கிழங்கை கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவிந்திர சமரவீரவின் தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவ் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
வெளிமட ஊவா பரனகம மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் உருளை கிழங்கை செய்கை பண்ணும் விவசாயிகள் விலை வீழ்ச்சி காரணமாக பல்வேறு சிரமங்களுக்குட்பட்டிருந்தனர். இதனால் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளினதும் அரச அதிகாரிகளினதும் பங்கேற்றலுடன் அமைச்சர் ரவிந்திர சமரவீரவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஊடாக தற்போது கொள்வனவு செய்யப்படுகின்ற அளவு சந்தைக்கு போதுமானதாக இல்லையென விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கமைய நாளாந்தம் 200 மெட்ரிக் தொன் உருளை கிழங்கை கொள்வனவு செய்வதற்கு இங்கு இணக்கம் எட்டப்பட்டது. உருளை கிழங்கை களஞ்சியப்படுத்துவதற்கு தேவையான இடம் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. அரச தலையீட்டுடன் இவ்வாறு உருளை கிழங்கை கொள்வனவு செய்வதனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நியாய விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.