ஹெரோயின் உள்ளிட்ட விஷத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விசேட மேற்பார்வை பிரிவின் செயற்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இப்பிரிவு இயங்கவுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகல்களை குறித்த விசேட பிரிவுக்கு பொதுமக்கள் வழங்க முடியும். 0113 024 803 மற்றும் 0113 024 815 அதேபோல் 0113 024 820, 0113 024 848 மற்றும் 0113 024 850 ஆகிய இலக்கங்களினூடாக போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் குறித்த விசேட பிரிவுக்கு அறிவிக்க முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

போதைப்பொருட்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விசேட பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பம்
படிக்க 1 நிமிடங்கள்