அரசாங்கத்தின் உள்ளக தகவல் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில் அடுத்த வருடம் நாம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 3 ஆயிரத்து 315 மில்லியன் டொலர்கள் மகிந்த ராஜபக்ஷவின் காலத்தின் பெற்றுக் கொண்ட கடனுக்காக செலுத்தப்பட வேண்டியதாகும். இது மொத்த கடன் தொகையில் 77 வீதம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வருடம் செலுத்த வேண்டிய கடன் தொகை 2 ஆயிரத்து 845 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் ஆயிரத்து 777 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட கடனுக்காக செலுத்தப்பட வேண்டியதாகும். 2010 ஆம் ஆண்டு முதல் அரச வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைய காரணம் கடந்த ஆட்சியில் பெற்றுக் கொண்ட கடன் தொகையே ஆகும். அபிவிருத்தியடைந்த நாடுளில் துறைமு:கம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடன் பெற்றுக் கொள்வது பொதுவான விடயமாகும். ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தி திட்டங்கள் நிர்வகிக்கப்பட்டு பின்னர் உரிமை உரித்தாக்கும் நிபந்தனைகளின் அடி;ப்படையிலேயே கடன்களை பெற்றுக் கொள்ளும். நிலைமை இவ்வாறு இருக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கை அபிவிருத்தியடைந்த நாடு ஒன்று செயல்படும் விதத்திலேயே கடனை பெற்றுள்ளது. இதன் மூலம் தேவையற்ற அபிவிருத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் தலைமீது கடன்களை சுமத்துவதற்கு கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிவேக பாதை, விமான நிலையம், துறைமுகம் ஆகிய அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவாகும் நியாயமான நிதியை விட பலமடங்கு செலவிடப்பட்டதாக சுட்டிக்காட்டி தமது வங்கி கணக்குகளை நிரப்புவதில் கடந்த கால ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு தான்தோன்றித்தனமாக கடன்களை பெற்று தங்களது பைகளை நிரப்பியுள்ளனர். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தலை விமான நிலையம் மற்றும் அதிவேக பாதைகளுக்காக பெறப்பட்ட கடன்கள் 2014 ஆம் ஆண்டின் பின்னரே செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சர்வதேச பிணைமுறி கடன்களாக 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ளன. இதனை செலுத்தும் காலம் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகின்றது. இதற்காக 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒரே முறையில் செலுத்த வேண்டுமென்பது விசேட அம்சமாகும். இதற்கு புறம்பாக சர்வதேச நாணய நிதியத்தினிடமிருந்து பெறப்பட்ட கடன் மற்றும் வெளிநாட்டு திரைசேறி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளுக்கான கடன்களை தனித்தனியாக செலுத்த வேண்டி இருப்பது துரதிஷ்டவசமானதாகும். கடந்த அரசாங்கம் அவ்வாறு செயல்பட்ட போதும் தற்போதைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள் அனைத்தும் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. புதிய முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காகவும் விவசாய துறையை அபிவிருத்தி செய்வதற்காகவும் தற்போதைய அரசாங்கம் கடன்களை பெற்றுக் கொண்டிருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். அண்மையில் ஆரம்பிக்கப்பட்;ட கம்பெரலிய மற்றும் என்ட பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டங்கள் எதிர்கால வெற்றிகளை இலக்கு வைத்தே தற்போதைய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்றன.