கூட்டு எதிர்கட்சி இரட்டைவேடம் தரித்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.
அண்மையில் எமது நாட்டின் தேசிய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அப்போது எமது மொட்டுக்காரர்கள் என்ன கூறினார்கள்? இந்தியாவுக்கு முட்டுக்கொடுக்கின்ற இந்த அரசாங்கத்தை விரட்டுவோம் என கூறினார்கள். ஞாபகம் உள்ளதுதானே சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மோடியின் அருகில் சென்று ஆம், ஓம், மோடி சரனங்கச்சாமி, இந்தியா சரனங்கச்சாமி, என்று அனைத்திற்கும் தலையசைத்தார். அதனை மேலும் பலப்படுத்த அவருடைய புதல்வரான நாமலும் மோடி சரனங்கச்சாமி, இந்தியா சரனங்கச்சாமி, காந்தி சரனங்கச்சாமி, இந்தியா என்பது எமது சகோதர நாடு என்றெல்லாம் அவரும் கூறினார். இவர்கள் யார்? இவர்கள்தான் கறுப்பு கொடி காட்டச் சொன்னவர்கள். இப்போது புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒன்றையும், இந்தியாவில் ஒன்றையும் சொல்ல இவர்களால் எப்படிதான் முடிகின்றதோ தெரியாது என தெரிவித்தார்.
பதுளை ஊவாபரனகம, உதாகம்மான கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உதாகம்மான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட 123 வது மாதிரி கிராமம் இதுவாகும். 22 வீடுகள் அடங்கிய இக்கிராமத்தின் நிர்மாண பணிகளுக்கென 179 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது. அமைச்சல் ரவிந்திர சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.