மலிந்து புதா மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நட்டஈட்டுத்தொகை உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுமென கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் விசேட விசாரணையொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் கண்டறிவதற்கென விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பகட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.