திருகோணமலை மாவட்டம் முழுவதும் எதிர்வரும் இரு தினங்களுக்கு மின்துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதி உயர் மின்னழுத்த பிரதான மின் கம்பி பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக குறித்த மின் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படுகிறது. அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் காலை 07.00 மணியிலிருந்து பிற்பகல் 05.00 மணிவரை மின் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.