ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு வெவ்வேறு இடங்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட, ஆரம்யா வீதி பிரதேசத்தில் 11 கிராமும் 300 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 46 வயதுடைய ஒருவரும் மோதரை, தொட்டலங்க பிரதேசத்தில் 02 கிராமும் 450 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 36 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.