உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏழை அல்லது பணக்காரன் அத்துடன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல கமிஷனும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர்கள் ஒருமுறை அல்லது 2 முறையல்ல. 20 தடவை தற்கொலைக்கு முயன்று தங்கள் தங்கள் மாய்த்துக் கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 முதல் 29 வயது நிரம்பிய இளைய பருவத்தினரே அதிகம்.
தற்கொலை செய்பவர்களில் 20 சதவீதம் பேர் விஷம் குடித்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தூக்குபோட்டும், தீக்குளித்தும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதேநேரத்தில் பணக்கார நாடுகளில் மனநலம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம், மது போதை மற்றும் போதை மருந்து உள்ளிட்டவைகளால் தற்கொலைகள் நடைபெறுகின்றன. மனதூண்டுதல் மற்றும் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பல தற்கொலை சம்பவங்கள் நடை பெறுவதாகவு