நாட்டிலிருந்து பாதாள உலக குழுவும் போதைப்பொருளும் இல்லாதொழிக்கப்படுமென நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தேனும் நாட்டை போதைப்பொருள் வர்த்தகர்கள மற்றும் பாதாள உலக குழுவினரிடமிருந்து விடுவிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியாளர்கள் போதைப்பொருள் வர்த்தகர்களை பாதுகாத்ததாகவும் அமைச்சர் தலதா அத்துகோரல குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் ஆட்சிபீடமேற முடியாதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.