ரயில் சேவையை மேலும் தரம்மிக்கதாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கென ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய புதிதாக 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனூடாக ரயில் பயணிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.