அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் கிண்ணத்தை வென்று ஜப்பானிய வீராங்கனை நவோமி புதிய வரலாற்றை படைத்தார். அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் தர வரிசையில் 26 வது இடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், 19 வது இடத்திலுள்ள நவோமி ஒசாக்காவை எதிர்கொண்டார். 23 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் நவோமிக்கு நெருக்கடி வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அபாரமாக செயல்பட்டு 6-2, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம கிராண்ஸ்லாம் அரங்கில் கிண்ணத்தை வென்ற முதல் ஜப்பானிய நட்சத்திரம் என்ற சாதனையை நவோமி படைத்தார். போட்டியின் போது பார்வையாளர்களுடன் செரீனாவின் பயிற்சியாளர் பெட்ரிக்கும் அமர்ந்திருந்தார். 2 வது செட்டின் போது கை அசைவின் மூலம் பெட்ரிக் பயிற்சி தந்ததாக இருக்கை நடுவர் ராமோஸ் செரீனாவை எச்சரித்தார். இதனை மறுத்த செரீனா ஆக்ரோசமானார். ஒரு கட்டத்தில் போட்டியில் பின்தங்க டென்னிஸ் மட்டையையும் செரீனா உடைத்தெறிந்தார். இது விளையாட்டு விதியை மீறிய செயல் என கூறி செரீனாவுக்கு ஒரு பெனால்ட்டி புள்ளியை நடுவார் ராமோஷ் அளித்தார். இது நவோமியின் கணக்கில் சேர்க்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த செரீனா நடுவரிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்;டார். நீங்கள் ஒரு திருடர் எனவும் திட்டினார். செரீனாவின் இச் செயல் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.