தூர்ந்துபோன வயல்களில் விவசாயத்தை மேற்கொள்வதற்கான தேசிய விவசாய சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை ஹம்பாந்தோட்டடையில் ஆரம்பமாகும். இதனூடாக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் வயல்காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ள முடியும்.
பல ஆண்டுகளாக விவசாயத்திற்காக பயன்படுத்தாத வயல்கள் பல்வேறு காரணங்களினால் அதன் உரிமையாளர் அவற்றில் விவசாயத்தை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. விவசாய அமைச்சும் கமநல சேவை அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுக்கம் 26 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் மீண்டும் விவசாயத்தை மேற்கொள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வயல்காணிகளில் விவசயாம் மேற்கொள்ளப்படவில்லை. இதனை கருத்திற்கொண்டு 2018 ம் ஆண்டு பெரும்போகத்தின் தூர்ந்துபோன அனைத்து வயல்காணிகளிலும் விவசாயத்தை மேற்கொள்ள அதன் உரிமையாளர்களை தூண்டுவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்தது. இராணுவம், சிவில் பாதுகாப்பு படை மற்றும் நெற்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அவற்றை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. கமநல சேவை திணைக்களம் இதுதொடர்பாக வயல்காணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது. தூர்ந்து போன வயல்காணிகளில் மீண்டும் விவாசாயத்தை மேற்கொள்ள விவசாய சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை ஹம்பாந்தோட்டை ருகுணு மா கம்பொர மண்டபத்தில் நடைபெறும். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட பலர்இதில் கலந்துகொள்ளவுள்ளனர். தூர்ந்து போன வயல்காணிகளில் மீண்டும் விவசாயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு தேவையான உணவு உற்பத்தியை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். அடுத்தாண்டு மொரகஹகந்த களுகங்கை திட்டத்தின் ஊடாக பல மாவட்டங்களுக்கு நீர் வசதி ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக அடுத்தபோக விளைச்சலை அதிகரிக்க முடியுமென விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.