ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதிக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதான சந்தேக நபரான பெண்ணொருவர் மற்றும் அதில் பணிபுரியும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பண்ணிப்பிட்டிய மற்றும் மீகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.