fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதை மாத்திரைகளுடன் இளைஞரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 11:50

போதை மாத்திரைகளுடன் இளைஞரொருவர் கைது

5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 20 வயதான இளைஞரொருவர் நுரைச்சோலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். போதை மாத்திரைகளை வீட்டில் மறைத்துவைத்திருந்த நிலையில், அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது சகோதரர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்கென தனக்கு தந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அவரது சகோதரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அவர் நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடும் நபரென தெரியவந்துள்ளது. வர்த்தகர்கள் மற்றும் பிரதேச பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த நபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 11:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க