ஜப்பானில் பயங்கர நிலநடுக்கவும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக கட்டடங்கள் தரைமட்டமாகின. கடந்த நான்காம் திகதி ஜேபி என்ற புயல் தாக்கியதில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் தரைமட்டமாகியதுடன், பாலங்கள் பிளவுப்பட்டு நெடுஞ்சாலைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைதொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 30 இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. மீட்பு நடவடிக்கைகளுக்கு என 25 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.