ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் நேற்று மாலை மாணிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செயய்ப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு மாத காலமாக யாழில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் அசம்பாவித சம்பவங்களோடு தொடர்புபட்டவர் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் யாழ் கொக்குவிலிலுள்ள தனது காதலியை பார்க்க வந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய இந்த சந்தேக நபர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக தலை மறைவாகியிருந்தார்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் மூலம் இவர் கைது செய்யப்பட்டார்.யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.