அரச பஸ் போக்குவரத்து பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சில மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.
இன்று பிற்பகல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே பணிப்புறக்கணிப்பினை கைவிட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.