புலம்பெயர் அரசியல் நாட்டுக்கு தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய மற்றும் பெசில் ராஜபக்ஷ போன்றவர்கள் நடத்துவது புலம்பெயர் அரசியல் முறையாகும். அவர்கள் ஒரு மாதம் அரசியல் செய்வார்கள். பின்னர் வீடுகளுக்கு சென்று உறவினர்களை சந்தித்து வீட்டு வளவை துப்பராக்கிவிட்டு மீண்;டும் வருவார்கள். இதுதான் புலம்பெயர் அரசியல்வாதிகளின் சுபாவமாகும். அவர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தாலும் கூட அவர்களின் பிரதான கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்காவிலேயே உள்ளது. அமெரிக்கா தனக்கு வழங்கியுள்ள பிரஜாவுரிமை அந்தஸ்தை ஒருபோதும் இழக்க தயாரில்லையென பெசில் ராஜபக்ஷ அண்மையில் பேட்டியொன்றில் கூறியிருந்ததை நான் அவதானித்தேன் என தெரிவித்தார்.