ஹங்வெல்ல – ஊராபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்று பாதையை விட்டு விலகி விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரும், சிறுமியொருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுமி மற்றும் 37 வயதுடைய பெண் என பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிரிந்திவெல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.