தனியார் பஸ் வண்டிகள் இன்று முதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. 475 பஸ் மார்க்கங்களில் அனுமதிப்பத்திரத்துடன் சேவையிலுள்ள 5 ஆயிரத்து 500 பஸ் வண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் 8ம் திகதி வரை சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும். பயணிகள் போக்குவரத்து சேவை ஒழுங்குப்படுத்தும் முன்மாதிரி வாரத்திற்கு இணைவாக திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை தனியார் பஸ் வண்டி தொடர்பான முறைப்பாடுகளை 011 555 95 95 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பதிவுசெய்ய முடியுமென மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.