இலங்கை கடற்படைக்கு இரண்டு ரோந்து கப்பல்களை பெற்றுக்கொடுத்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுஸூகி நக்கானியுடனான சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பு நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
கண்டி மாநகர அபிவிருத்தி திட்டத்தை வரைவதற்கும்இ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கும் ஜப்பான் வழங்கும் உதவிகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.
இந்துமா சமுத்திரத்தில் சுயாதீமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை பிரதமர் இதன்போது விளக்கிக் கூறினார். சுதந்திர கப்பல் பயணத்தின் முக்கியத்துவத்தை ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வரவேற்று பேசினார்.
இதற்கு ஜப்பான் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் பற்றி கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.