ஜயந்தியாய குளத்தில் நீராடச்சென்ற இரண்டு அரபுக்கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.
ஆழமறியாது காலை விடாதே என்பது பழமொழியாகும். வெளியூர்களிலிருந்து தூர இடங்களுக்கு சென்று நீர் நிலைகளில் நீராடச்சென்ற பலர் உயிரிழந்த சம்பவங்களை அண்மைக்காலமாக கேட்டுவருகின்றோம். குறிப்பாக வெளியிடங்களிலிருந்து நீர் நிலைகளின் ஆழத்தை அறியாமல் அவற்றில் இறங்கிய பல மாணவர்கள் உயிரிழந்த சோகச் சம்பவங்களை கேட்டு வருகின்றோம். நீராடவேண்டாமென சில இடங்களில் பதாதைகள் போடப்பட்ட சந்தர்ப்பங்களில் அவற்றைக் கவனிக்காமல் அவ்விடங்களில் நீராடச்சென்று பல அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த சம்பவங்களும் உண்டு இந்நிலையில் ஏறாவூர் பாகியத்துஷ் ஷாலிஹா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் ரிதிதென்னையிலுள்ள அவர்களது நண்பர்களது வீட்டிற்கு சென்றபோது பொழுது போக்கிற்காக மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமத்திலுள்ள ஜயந்தியாய குளத்திலி குளிப்பதற்காக தோணியில் சென்றபோது தோணி கவின்றதில் அதில் பணித்த நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களில் இரண்டுபேர் காப்பற்றப்பட்டதுடன் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர். 23 வயதுடைய ஏறாவூர் ஸகாத் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எம்.சாஹிர் மற்றும் ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த யு.எம்.சாதிக் எனும் 22 வயதுடைய அரபுக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். 22 வயதுடைய வை.பி.எம். இஸ்ஸத் எனும் இறுதியாண்டு மாணவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மரணமடைந்தவர்களின் ஜனாசாக்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.