இந்தோனேஷியாவில் இடம்பெற்றுவரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் 6ம் நாளான இன்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, வீர, வீராங்கனைகள் பங்குகொள்ளும் போட்டிகள் பல இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன. பெட்மின்டன், கரப்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜகார்த்தா நகரிலுள்ள எமது விசேட பிரதிநிதி தெரிவித்தார். முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். பெட்மின்டன் போட்டிகளை பொருத்தவரையில் இலங்கை வீரரகள் இரண்டாம் சுற்றில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளுக்கமைய சீனா பதக்கப்பட்டியலில் முன்னிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.